அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்பி பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் தலைமையில் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் கலந்து கொண்டார். இதில், மாவட்ட நிர்வாகிகள் கள்ளத்தெரு குமார், பாலசுப்ரமணியன், அண்ணா சிலை விக்டர், சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், நாச்சிகுறிச்சி அருண் பிரசாத், ஜீவா நகர் மாரிமுத்து, பாலக்கரை மாரியப்பன், திம்மை செந்தில்குமார், வழக்கறிஞர் பிரிவு சுகன்யா, சுப்ரமணி கலை பிரிவு ராஜீவ் காந்தி, டெல்லி ராஜ்குமார், எஸ் சி எஸ்டி பிரிவு வினோத் குமார், செய்தி தொடர்பாளர் நிர்மல் குமார், கோகுல், சண்முகம், முருகன், கிருஷ்ணமூர்த்தி, அர்னால்டு, உறையூர் விஜி, புவன், சிந்தை ஸ்ரீராம், வினோத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.