திருச்சி, கே.கே.நகர் உஸ்மான் அலி தெருவை சேர்ந்தவர் அப்துல் சலாம் (வயது 34).இவர், எல்ஐசி காலனி பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 13 ந்தேதி கடையை பூட்டி விட்டு அப்துல் சலாம் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை கடைக்கு சென்று பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் திருட்டுப் போய் இருந்தது. இதுகுறித்து அவர் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.