Rock Fort Times
Online News

திருச்சி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை- கிராமத் தலைவர் கைது…!

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒரு பெண்ணுக்கு இட பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பக்கத்து வீட்டை சேர்ந்த சரோஜா, முத்துலட்சுமி, புனிதா சந்திரசேகர் ஆகியோர் அப்பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி முடியை பிடித்து இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அந்தப் பெண் கிராம தலைவர் ரமேஷ் (48) என்பவருடன் திருவெறும்பூர் காவல் நிலையம் வந்து சப்-இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் புகார் கொடுத்துவிட்டு அவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது வழியில் உள்ள காட்டு பகுதிக்குள் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற ரமேஷ், அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம தலைவர் ரமேஷை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்