Rock Fort Times
Online News

மாணவர்களை கை, கால்களை அமுக்கி விட சொன்ன பள்ளி தலைமை ஆசிரியை ட்ரான்ஸ்ஃபர்…! (வீடியோ இணைப்பு)

தர்மபுரி மாவட்​டம், அரூர் அரு​கே​யுள்ள மாவேரிப்​பட்டி கிராமத்​தில் ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இங்கு 30-க்​கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். இந்​நிலையில், தலைமை ஆசிரியை கலை​வாணி மாணவ, மாணவிகளை அழைத்து கை- கால்களை அமுக்கி விட சொல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், அதிர்ச்​சி​ அடைந்த பெற்​றோர் தங்களது குழந்தைகளை பள்​ளிக்கு அனுப்ப மறுத்​து, பள்​ளியை முற்​றுகை​யிட்​டனர். இதுகுறித்த தகவலின் அடிப்படையில் மாவட்ட தொடக்​கக் கல்வி அலு​வலர் விஜயகு​மார், வட்​டாட்​சி​யர் பெரு​மாள், வரு​வாய் ஆய்​வாளர் சத்​யபிரியா ஆகியோர் பள்​ளிக்கு நேரில் சென்​று, சம்​பந்​தப்​பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், மாவட்ட நிர்​வாகத்​தின் வழி​காட்​டு​தல்​படி, தலைமை ஆசிரியர் வேறு பள்​ளிக்கு இடமாறு​தல் செய்யப்பட்டார். அவருக்​குப் பதிலாக புதிய தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட்டார். இதேபோல அரசு பள்ளிகளுக்கு வரும் ஒரு சில ஆசிரியர்கள் மது அருந்திவிட்டு வருவதும், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அவர்கள் மீது டிரான்ஸ்பர், சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகிறது. இவ்வாறு ஒழுங்கீனமாக செயல்படும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்