செல்போன் சார்ஜரில் மறைத்து கடத்த முயன்ற ரூ.5 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…- 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் இன்று (08-04-2025) திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் கோலாலம்பூர் செல்ல தயாராக இருந்தது. அதில் பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 பயணிகள் தங்களது செல்போன் சார்ஜரின் உள்ளே மறைத்து வைத்திருந்த ரூ.4.96 லட்சம் மதிப்பிலான இந்தியா மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.