திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மிட்டவுன் 3 வருட சமூக சேவை ஒப்பந்தம்….!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சமூக நலத் துறையுடன் இணைந்து ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன் ஏற்கனவே ஒரு வருட சமூக நல சேவை ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் சிறப்பாக சமூக சேவை செய்ததன் காரணமாக தற்போது மூன்று வருட ஒப்பந்தத்தை ரோட்டரி கிளப் புதுப்பித்துக் கொண்டது. இதற்கான ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் ஜமீர்பாஷா, பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், பதிவாளர் மற்றும் சமூகப்பணி துறைத் தலைவர் ஜெரிடா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். ரோட்டரி கிளப் ஆப் திருச்சி மிட்டவுன் சங்க தலைவர் ராமதாஸ் சங்கத்தின் சார்பிலும், பல்கலைக்கழகத்தின் சார்பில் பதிவாளரும் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வில் வருங்கால செயலாளர் விஸ்வநாதன் பங்கேற்று சிறப்பித்தார். இந்த முக்கியமான ஒப்பந்தப் புதுப்பிக்கையை வருங்கால தலைவர் எஸ்.முத்துகுமரவேல் ஒருங்கிணைத்தார். இந்த ஒப்பந்தம், சமூகத்திற்கு பயனளிக்கும் முக்கியமான தொண்டு செயல்களை முன்னெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.