Rock Fort Times
Online News

திருச்சி,ஸ்ரீரங்கத்தில் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை ! மன அழுத்தம் காரணமா? காவல்துறை விசாரணை!

திருச்சி,ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் விக்கிரமாதித்தன்(வயது 63). ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி. இவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இவரது மனைவிக்கு கேன்சர் இருந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் விக்கிரமாதித்தன் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது இன்று ( டிச.24 )மின்விசிறியில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் திலீபன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்