திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் சர்வதேச விமான நிலைய புதிய முனைய திறப்பு கடந்த 2ம் தேதி நடைபெற்றன.
விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றினார். மேலும், திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்து பேசினார். இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 19-ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருகிறார். அவர், திருப்பூரில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். பின்னர், திருப்பூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
1
of 881
Comments are closed, but trackbacks and pingbacks are open.