திருச்சி மாவட்டம், துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (20.12.2024) வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்.அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்சிப் சி-செக்டார், ஏ, பி, இ,ஆர் மற்றும் பி.எச் செக்டார், தேசிய தொழில்நுட்ப கழகம், துவாக்குடி, தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைகுடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்று திருச்சி கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.கணேசன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.