சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை ( 2.12.2023 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக சமயபுரம், வெங்கங்குடி வ.உ.சி நகர், எழில் நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேல சீதேவிமங்கலம், புரத்தாக்குடி, கரியமாணிக்கம், தெற்கு எதுமலை பாலையூர், வலையூர், கன்னியாக்குடி ஸ்ரீ பெரும்புதூர், மாருதி நகர் தாளக்குடி, கீரமங்கலம், ராஜா நகர், செல்லத்தமிழ் நகர், ஆனந்த் நகர், அகிலாண்டபுரம், கூத்தூர், நொச்சியம் பளூர், திருவாசி, அழகிய மணவாளம், குமரக்குடி, திருவரங்கப்பட்டி, பணமங்கலம், எடையப்பட்டி, அய்யம்பாளையம், தத்த மங்கலம், சிறுகுடி வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம் அக்கரைப்பட்டி, வங்காரம் ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.