Rock Fort Times
Online News

துவாக்குடி பகுதியில் நாளை(ஜூலை 17) மின்தடை…!

திருச்சி கிழக்கு கோட்டம், துவாக்குடி உபகோட்டம், துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 17) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள்மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டார் மற்றும் ஏ, பி, இ, ஆர் மற்றும் பிஎச் செக்டார், தேசிய தொழிற்நுட்பக் கழகம் (என்ஐடி) துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை
4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என இயக்குதலும், காத்தலும், செயற்பொறியாளர் எம்.கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்