திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உட்பட 3 பெண்கள் திடீர் மாயம் போலீசார் தீவிர விசாரணை..!
திருச்சியில் கல்லூரி மாணவி உட்பட 3 பெண்கள் ஒரே நேரத்தில் மாயமாகி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி புது தெரு பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் ஒரு மகன் உள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பாலச்சந்தர் திடீர் உடல்நல குறைவால் இறந்துவிட்டார். இதனால் ரேவதி, திருச்சி ஏர்போர்ட் சந்தோஷ் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஏப்.18 ) திடீரென இவர் காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக இவரது பெற்றோர், திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதேபோல, திருவானைக்கோவில்நேதாஜி தெரு பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி. கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியே சென்ற கிருஷ்ணவேணி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலம் துறவிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் பிரியதர்ஷினி. இவர் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி இருந்த மாணவி வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மாலை விடுதி திரும்பவில்லை இது குறித்து அவரது தந்தை பழனிவேல் கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.