பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று (மே 8) வெளியிடப்பட்டது. இதில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு (2025) தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 7,92,494 தேர்ச்சி பெற்றவர்கள் 7,53,142. சதவிகிதம் 95.03 ஆகும். கடந்தாண்டு (2024) பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 7,60,606 தேர்ச்சி பெற்றவர்கள் 7,19,196. தேர்ச்சி சதவிகிதம் 94 56. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 0.47 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 91.94 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.71 சதவீதமும், தனியார் சுயநிதி பள்ளிகள் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
Comments are closed.