Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: 6 பேருக்கு மறுவாழ்வு அளித்தவருக்கு அரசு சார்பில் மரியாதை…!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் தலையில் அடிபட்ட நிலையில் கடந்த 21ம் தேதி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் அந்த நபரின் உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் அந்த நபரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன் வந்தனர். அதனைத்தொடர்ந்து அந்த நபருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடலில் இருந்து இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல் கண் மற்றும் தோல் ஆகியவை அகற்றப்பட்டது. அதில் ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கும், மற்றொரு சிறுநீரகம் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் நபருக்கும் தானமாக அளிக்கப்பட்டது. கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்விழி திருச்சி அரசு மருத்துவமனை நோயாளி ஒருவருக்கும் தானமாக வழங்கப்பட்டது. தங்களது உறவினர் இறந்தாலும் அவர் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த திருப்தியில் அவரது உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். மூளை சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த நபரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்