திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில், அம்பேத்கர் சிலைக்கு கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்( ஏப்ரல் 14) தமிழ்நாடு அரசு சார்பில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், இ.பி. ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு திருச்சி கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் தலைமையிலும், கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், பி.எம்.சபியுல்லா ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் தொடர்ச்சியாக “சமத்துவ நாள் உறுதிமொழி” ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், கோவிந்தராஜ், செங்குட்டுவன், லீலாவேலு, மூக்கன், நூர்கான், சந்திரமோகன், பொன்செல்லையா, சரோஜினி, பகுதி கழகச் செயலாளர் பாபு, நீலமேகம், தர்மராஜ், மோகன், ராஜ்முகம்மது, விஜயகுமார், சிவக்குமார் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட, வார்டு, கிளை செயலாளர்கள் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட கழகத்தினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.