Rock Fort Times
Online News

அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு…

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. எனவே கடந்த 7-ம் தேதி தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு 11-ந்தேதி( நாளை) நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது.

இந்தசூழலில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் சென்றதால், குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தற்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 7 நாட்கள் தொடர் விடுமுறைக்கு   பிறகு நாளை ( 11.12.2023 ) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. எனவே, தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், நாளை நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதாவது நாளை தொடங்க வேண்டிய தேர்வுகள் புதன் கிழமை தொடங்கும் என்றும், இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதில், 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள், வருகிற 13-ந்தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி 13ம் தேதி தமிழ், 14ம் தேதி விருப்பமொழி. 15ம் தேதி ஆங்கிலம், 18ம் தேதி கணிதம், 20ம் தேதி அறிவியல், 21ம் தேதி உடற்கல்வி, 22ம் தேதி சமூக அறிவியலுடன் 10ம் வகுப்பிற்கு தேர்வுகள் முடிவடையும். 11ம் மற்றும் 12ம் வகுப்பிறகு டிச.13ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்