முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சேவா சங்கம் பள்ளி எதிரில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் இன்று ( 27.05.2023 ) மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் எல்.ரெக்ஸ், மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.முரளி, மாவட்ட துணை தலைவர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர்கள், கோட்டத் தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சந்திரன், சேவாதள பிரிவு தலைவர் அப்துல் குத்தூஸ், மகளிர் அணி தலைவி ஷீலா செலஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.