Rock Fort Times
Online News

திருச்சி கோர்ட் அருகே அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு…- மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் திறந்து வைத்தார்

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்றம் அருகே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று(17-04-2025) நடைபெற்றது. விழாவில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினார். இதில் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் முல்லை சுரேஷ், அவைத் தலைவர் சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் மலர்விழி, சின்னத்துரை, ஜெயராமன், வெங்கடேசன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட ஐ.டி பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, சிறுபான்மை பிரிவு அப்பாஸ், பகுதி செயலாளர்கள் என்.எஸ்.பூபதி, அன்பழகன், வாசுதேவன், ரோஜர் , கலைவாணன், ஏர்போர்ட் விஜி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர், இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி, ரமணிலால், வழக்கறிஞர்கள் தினேஷ் பாபு ,ஜெயஸ்ரீ, புவனேஸ்வரி, தாமரைச்செல்வன், நிர்வாகிகள் அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, இலியாஸ், நத்தர்ஷா, கே.சி.பி ஆனந்த், கிராப்பட்டி கமலஹாசன், புதூர் வசந்தகுமார், வெல்லமண்டி கன்னியப்பன், நாட்ஸ் சொக்கலிங்கம், கல்லுக்குழி முருகன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்