திருவரங்கம் பஞ்சகரை ரோடு ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 38) இவர் அம்மா மண்டபம் பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு சென்ற ஒரு வாலிபர் கடையில் இருந்த ரூபாய் 6 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து கோவிந்தன் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்துக்குரிய வகையில் ஸ்ரீரங்கம் பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் பெயர் விஜய் என்பதும், திருவாரூர் மாவட்டம் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.அவரிடமிருந்து தேங்காய் வியாபாரியிடமிருந்து திருடிய ரூபாய் 6 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.