தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் திருச்சி மிளகு பாறை பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்… தமிழக முதலமைச்சாின் உத்தரவுப்படி இன்று திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்பட்டது. இங்கு மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என மொத்தம் 56 பேர் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனை மிக சுகாதாரத்தோடும் போதிய அளவு தேவையான மருந்துகளும் கையிருப்பு உள்ளது. தனியார் மருத்துவமனைக்கு நிகரான ஒரு மருத்துவமனையாக திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது என்றும் குறிப்பாக பல் மருத்துவ பிரிவு மிக சிறப்பாக செயல்படுகிறது என்றாா். அதேபோல் மகப்பேறு மருத்துவமும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்றாா். இந்த ஆய்வில், சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்கள் அமைச்சாிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனா். மாலை நேரங்களில் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக உள்ளது இங்குள்ள ஜன்னல்களுக்கு கொசுவலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தியுள்ளேன். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அனைத்து ஜன்னல்களிலும் கொசுவலை அமைக்கப்படும் என்றாா். அதேபோல் தீவிர சிகிச்சை மருத்துவ பிரிவு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுவும் ஒரு வார காலத்திற்குள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் கூறினார்.மேலும் அவா் பேசுகையில், தற்போது ஏறக்குறைய 6 லட்சம் பேர் வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். எனவே அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய தொழிலாளர்கள் குறித்து தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகள் உறுதுணையோடு அந்த தொழிலாளர்கள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றாா். இந்த ஆய்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், இஎஸ்ஐ மருத்துவ துறையின் இயக்குனர் ராஜமூர்த்தி, செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.