திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கிறிஸ்தவ மதத் தலைவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றதோடு ஆதரவு கோரினார். அந்த வகையில், மேலப்புதூரில் உள்ள திருச்சி மறை மாவட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபையின் குருகுல முதல்வர் எல்.அந்துவானை நேரில் சந்தித்து ஆசி பெற்றதோடு திமுகவுக்கு ஆதரவு திரட்டினார். அதனைத் தொடர்ந்து, தென்னிந்திய திருச்சபைகளின் திருச்சி – தஞ்சை மண்டல பேராயர் சாமுவேல் ராஜ துரையை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

Comments are closed.