Rock Fort Times
Online News

மாஸ்டர் ப்ளான்-2045..! தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த திருச்சி கிரடாய் நிர்வாகிகள்..!

திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் மாஸ்டர் பிளான் – 2045 சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இன்று திருச்சிக்கு வருகைபுரிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, கிரடாய் சங்க நிர்வாகிகள் சந்தித்து தங்களது மகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

அப்போது கிரடாய் அமைப்பின் மாநில துணைத்தலைவர் வி. கோபிநாத், சேர்மன்  ஆர். மனோகர், திருச்சி தலைவர் ஏ. நசுருதீன், துணைத்தலைவர் எம். இளமுருகன், செயலாளர் பி. முருகானந்தம், பாரத் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் எம். நூர்முகம்மது, ஆதித்யா கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் ஆர்.எஸ். ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்