திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கிரேசிமேரி, கோட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.