திருச்சி கோணக்கரை பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்தக் கடைகளுக்கு முன்பாக கடந்த இரண்டு நாட்களாக கார் ஒன்று நின்றது. அதில் ஒருவர் சாய்ந்த நிலையில் இருந்தார். 2 நாட்களாக அந்த கார் அங்கேயே நின்றதால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை திறந்து பார்த்தபோது அதில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
அவரது உடல் அழுகிப் போய் இருந்தது. பின்னர், அந்தக் காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த கார் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த ஆடலரசுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த , காரில் ஏசி ஓடிக்கொண்டே இருந்தது. ஆடலரசு அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாரா? அல்லது ஏசி ஓடிக்கொண்டே இருந்ததால் மூச்சுத் திணறி இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.