ஐயப்பன் பிறந்த நட்சத்திரம் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் உத்தர நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஐயப்பன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், வழிபாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டு கார்த்திகை மாதம் 10 ஆம் நாள் (நவம்பர் 25) திங்கள்கிழமை உத்தர நட்சத்திரத்தை யொட்டி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரம்மோத்ஸவம் தொடங்கியதை யொட்டி மாலை கொடியேற்றமும், வலம்புரி சங்கு பூர்வாங்க பூஜைகளும் நடைபெற்றன. முன்னதாக திருச்சி ஐயப்ப சங்கம் சார்பில் காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் வரை மகா அன்னதானம் நடைபெற்றது. இதில்13,733 பேரும் தொடர்ந்து இரவு நடந்த அன்னதானத்தில் சுமார் 2000 பேரும் பங்கேற்றனர். அன்னதானத்தையொட்டி, கோயில் முதல் மேஜர் சரவணன் நினைவுத்தூண் வரை சாலையோரம் பக்தர்கள் வரிசையில் நின்று பங்கேற்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.
Comments are closed.