திருச்சியில் எம்பி திருச்சி சிவாவின் வீடு மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் காஜாமலை விஜய், துரைராஜ், முத்துசெல்வம், ராமதாஸ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஐந்து பேரையும் திமுக தலைமை திமுக கட்சியில் இருந்து தற்காலிக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் திருச்சியில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேருக்கும் ஜாமீன் கேட்டு திருச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது . நீதிபதி பாபு விசாரணை நடத்தி ஐந்து பேருக்கும் ஜாமின் வழங்க முடியாது என்று மறுத்துவிட்டார்.