


கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி காணாமல் போன 4 பள்ளி மாணவிகளை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 15 மாணவ, மாணவிகள் கால் பந்தாட்ட வீரர்கள். உடற்கல்வி ஆசிரியர் உதவியுடன் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விளையாட்டுப் போட்டிக்காக அழைத்து வந்துள்ளனர்.இந்நிலையில் விளையாட்டு போட்டி முடித்துவிட்டு மாயனூர் காவிரி கதவணையை பார்ப்பதற்காக ஆற்றிற்குள் இறங்கி உள்ளனர். அப்போது ஒவ்வொரு மாணவியாக உள்ளே இழுத்துச் சென்றதால் நான்கு மாணவிகள் நீரில் மூழ்கி காணாமல் போய்யுள்ளனா்.
v

Comments are closed, but trackbacks and pingbacks are open.