திருச்சி, வயலூர் ரோடு ரெட்டை வாய்க்கால் ரெங்கா காம்ப்ளக்ஸில் ரெங்கா ரெடிமேட்ஸ் ஷோரூம் திறப்பு விழா நேற்று ( ஜனவரி -1 ) நடைபெற்றது. புதிய ஷோரூமை ரெங்கா நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் தமிழரசன் திறந்து வைத்தார்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை ஷோரூம் உரிமையாளர் எம்.மாதங்க தேவ் மற்றும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். முருகேசன் ஆகியோர் வரவேற்றனர். இவ்விழாவில் ரங்கா நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் என்.அழகன், பொருளாளர் முத்துகிருஷ்ண மூர்த்தி, இணைச்செயலாளர் வி.இளங்கோவன், துணை செயலாளர் பாலு, செயற்குழு உறுப்பினர் சுந்தர், கேப்டன் இருதய சாமி, முத்து பாலி கிளினிக் மருத்துவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிமுகர்கள், அரசு அலுவலர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர். ரெங்கா ரெடிமேட்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜவுளிகள் குறித்து இதன் உரிமையாளர் மாதங்க தேவ் கூறுகையில்.,எங்களிடம் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்,பெண் என இருபாலருக்கும் ஏற்ற அனைத்து வகையான ஜவுளி & ரெடிமேட்ஸ் ரகங்களை தரமாகவும் நியாயமான விலையிலும் விற்பனை செய்கிறோம்.
அனைத்து முன்னணி பிராண்டுகளின் சர்ட், பேண்ட், ஜீன்ஸ், டீ – சர்ட், சுடிதார், சாரீஸ், லெக்கின்ஸ், கிட்ஸ் கார்மெண்ட்ஸ் போன்றவையும் தற்போதைய டிரெண்டிங்கிற்கு ஏற்ற மாடல்களில் கிடைக்கும். அல்லித்துறை, அதவத்தூர், நாச்சி குறிச்சி போன்ற திருச்சியின் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் இனி ரெடிமேட்ஸ் மற்றும் ஜவுளி ரகங்களை வாங்க பஜாருக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
எங்கள் ரங்கா ரெடிமேட்ஸிலேயே வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான ஆடைகளை வாங்கி அலைச்சல், நேர விரையத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தலாம் என்றார்.
Comments are closed.