திருச்சி, திருவானைக்காவலில் மழை நீரோடு சாக்கடை நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்…!
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்தவகையில் திருச்சி, திருவானைக்காவல் சன்னதி வீதியில் மழை நீரோடு சாக்கடை நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்தப் பகுதி மக்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்று வருகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள கடைகளுக்குள் கழிவுநீர் புகுந்துள்ளதால் வியாபாரிகளும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சிலர் தங்களது கடைகளை அடைத்துள்ளனர். இந்நிலை தொடர்ந்து நீடித்தால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும். ஆகவே, இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.