முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து காங்கிரசார் மரியாதை…!
சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான கக்கன் 117வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி இ.பி.ரோடு அம்பேத்கர் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கக்கன் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கலைப்பிரிவு ராஜீவ் காந்தி, மகளிர் அணி அஞ்சு, நாச்சிகுறிச்சி அருண்பிரசாத், அண்ணா சிலை விக்டர், வழக்கறிஞர் பிரிவு கிருபாகரன், ஜீவா நகர் மாரிமுத்து, மார்க்கெட் மாரியப்பன், எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் அல்லூர் பிரேம் கண்ணன், நாச்சி குறிச்சி வினோத் குமார், டெல்லி ராஜ்குமார், நிர்மல் குமார், கோகுல், கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், இன்ப நிலா, தனம், வீரம்மாள் மற்றும் பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Comments are closed.