திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவுக்கு தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் தங்க நகைகள் கடத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகளிடம் ரூ.37,93,845 மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், துபாய் தினார்கள், சவுதி ரியால் இருந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.