திருச்சி, பாலக்கரை கூனி பஜார் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது தந்தை அன்பழகன்(70). மார்சிங்பேட்டை ஹவுசிங் போர்டில்
வசித்து வந்த இவர் மதுபோதையில் மேலப்புதுார் ரயில்வே மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அங்கிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையிலசேர்த்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வேலு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Comments are closed.