செங்கல்பட்டு மற்றும் ஆம்பூர் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு பகுதியை மையமாக கொண்டு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக காலை 7.39 மணியளவில் பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் கர்நாடக மாநிலம் விஜயபுராவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டு இருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அண்மை காலமாக வடமாநிலங்களில் ஏற்பட்டிருந்த நில அதிர்வுகள் தற்போது, தென்மாநிலங்களான தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, கர்நாடகாவின் விஜயபுரா ஆகிய இடங்களிலும் உணரப்பட்டுள்ளது.
1 Comment
Comments are closed, but trackbacks and pingbacks are open.

https://graph.org
à®à¯à®à¯à®à®²à¯à®ªà®à¯à®à®¿à®²à¯ நிலநà®à¯à®à¯à®à®®à¯… – Rockfort Times