திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நீர்ப்பணி நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம், கலெக்டர்வெல் அய்யாளம்மன் படித்துறை நீர்ப்பணி நிலையம் மற்றும் ஜீயபுரம் – பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்திடும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் நாளை(8-8-23) காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக மரக்கடை, விறகுபேட்டை, மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், தில்லைநகர், அண்ணாநகர், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்பா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் கல்லாங்காடு ஆகிய பகுதிகளிலும், புகழ் நகர், பாரிநகர், எல்லைக்குடி , காவிரி நகர், கணேஷ் நகர், சந்தோஷ் நகர், ஆலத்தூர் , கல்கண்டார்கோட்டை , திருவெறும்பூர் வள்ளுவர் நகர், திருவெறும்பூர் ஒன்றிய காலனி, மற்றும் பிராட்டியூர், ராம்ஜி நகர், எடமலைப்பட்டிபுதூர், விஸ்வாஸ்நகர், ஜெயாநகர் மற்றும் பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளிலும் நாளை மறுநாள் ( 09.08.2023 ) அன்று ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. 10ந் தேதி (வியாழக்கிழமை) முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இந்த தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.