ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையானை நாள் ஒன்றுக்கு சுமார் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். வார கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் சுமார் 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பக்தர்கள் ஏழுமலையானை நீண்ட வரிசைகளில் காத்திருந்து தரிசிப்பர். ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதன்மூலம் பக்தர்களின் உண்டியல் காணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டில் (2024) மட்டும் ஏழுமலையானை 2.55 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அந்தவகையில் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1,365 கோடி கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. மேலும், 99 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 6.30 கோடி பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. 12.14 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Comments are closed.