திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெரும்பாலான பேருந்துகள் தில்லை நகர், உறையூர் வழியாக மலைக்கோட்டை பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை கடந்துதான் சத்திரம் பேருந்து நிலையம் சென்றன. இந்தப் பாலம் மிகவும் பழமை வாய்ந்தது என்பதாலும், போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும் அதனை இடித்துவிட்டு அகலமான பாலம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டன. இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் சென்று வருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாலப் பணியை விரைந்து முடிக்க திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ரயில்வே அதிகாரிகளிடம் முறையிட்டார். இதுகுறித்து துரித நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்நிலையில் பாலம் விரிவாக்க பணிக்காக பழமை வாய்ந்த மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றும் பணி இன்று(13-05-2025) தொடங்கியது. இதற்காக அந்த வழியாகச் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பாலப் பணிகளை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Comments are closed.