தமிழ்நாட்டில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகளும், காட்சிப்பதிவுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகின. பூதாகரமாக வெடித்த இந்த பிரச்சினையில் பீகாா் மற்றும் தமிழக அரசுகள் தலையிட்டு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பீகாா் அரசு அதிகாரிகள் குழு ஒன்று தமிழகத்திற்கு வந்து இங்குள்ள பீகாா் மாநில தொழிலாளர்களிடம் ஆய்வு நடத்தி வருகிறது. அப்போது தமிழகத்தில் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பீகாா் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதனால் நிலைமை திருப்திகரமாக இருக்கிறது என்று பீகாா்அரசு குழுவும் தெரிவித்தது.இந்நிலையில், நாகர்கோவிலில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுடன் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். தனியார் நிறுவனத்திற்கு சென்ற முதலமைச்சா் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்களிடம், அந்த வீடியோவை யாரும் நம்பவேண்டாம், அது வெறும் வதந்தி, தைரியமாக இருங்கள் என்று தெரிவித்தார்.

Next Post