Rock Fort Times
Online News

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது பற்றி அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவதோடு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அதன்படி 2 நாள் பயணமாக இன்றும் நாளையும் ( ஜூன் 15, 16) தஞ்சை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இது ஒருபுறம் இருக்க தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணைக்கு இன்று வந்தடைந்தது. இந்த நிலையில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்து நெல்மணிகளை தூவினார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்எல்ஏக்கள் தஞ்சை கலெக்டர், அரசு அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்