Rock Fort Times
Online News

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம்: அருண் நியமனம்…!

சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் பணியாற்றி வந்தார். அவர் இன்று(08-07-2024) கமிஷனர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர், காவலர் பயிற்சி பள்ளி இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னை போலீஸ் கமிஷனராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக இந்த மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்