கர்நாடக மாநிலம் கிழக்கு பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தது. இதில், பெண்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பெங்களூரு போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 8 தனிப்படைகள் அமைத்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக
பெங்களூரு, தார்வாட், ஹுப்ளி ஆகிய இடங்களில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், சிசிடிவியில் காணப்படும் நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனிடையே பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் சென்னை, ராமநாதபுரத்தில்
4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று(05-03-2024) தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்த வந்த 10க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் பல இடங்களில் சோதனை நடத்துகின்றனர். சென்னை முத்தையால்பேட்டை, பிடாரியார் கோயில் தெருவில் சோதனை நடைபெற்று வருகிறது. பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.