திருச்சி கோட்டை கீழ தேவதானம் அருகே உள்ள டாஸ்மாக்கில் மேலாளராக பணியாற்றி வருபவர் வீரமணி (வயது37). இவர் கடந்த 13ந் தேதி டாஸ்மாக் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். வீரமணி தர மறுக்கவே, அங்கு நின்று கொண்டிருந்த டாஸ்மாக் லோடு ஏற்றி வந்த வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார். இதுகுறித்து வீரமணி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த அருண்பிரசாத் (வயது 36) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருண்பிரசாத் சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.