Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி உயிரிழப்பு…!

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் புது தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு இரண்டு வருட தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று(01-04-2024) முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்