Rock Fort Times
Online News

நீதிபதிகள், வழக்கறிஞர்களின் கருத்துக்களை கேட்கும் கூட்டம்- திருச்சி நீதிமன்றத்தில் நாளை நடக்கிறது…!

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட் ஆகியோர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது :-  புதிதாக பொறுப்பேற்றுள்ள திருச்சி மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாவட்டத்தில் 10 வருடங்களுக்குப் பிறகு பென்ஜ் அண்ட் பார் மீட்டிங் ( நீதிபதிகள், வழக்கறிஞரின் கருத்துக்களை கேட்கும் நிகழ்ச்சி ) நாளை ( 25-11-2024) மதியம் 1 மணி அளவில் புதிய கட்டிட நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இதில்,  வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை நேரில் தெரிவித்து பயன் பெறலாம். அல்லது தலைவரிடம் கூறினால் அவர் நமது தேவைகளை எடுத்துரைப்பார். கூட்டத்தில் கலந்து கொள்ளும்  வழக்கறிஞர்கள் கட்டாயம் சீருடையில் வருமாறு கேட்டுக்கொள்கிறோம். பார் கவுன்சில் அடையாள அட்டை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்