Rock Fort Times
Online News

திருச்சியில் இரும்பு குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் டிரைவர்…!

திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து பகுதியில் உள்ள இரும்பு பைப் குடோனில் இருந்து  இரும்பு குழாய்களை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை திருச்சி திருவானைக்கோவில் நடுகொண்டையம்  பேட்டையை சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டினார். அரியமங்கலம் ஆஞ்சநேயர் கோவில் அருகே திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்றபோது  அதிக பாரம் காரணமாக மேடு ஏற முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது.  பின்னர் அந்த லாரி  பின்னோக்கி  வந்து சாலையின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும், அங்குள்ள குடியிருப்பு வாசிகளும் உயிர் தப்பினர்.  இதுகுறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகப்படியான லோடு ஏற்றி செல்வதால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்