Rock Fort Times
Online News

மேட்டூர் அணை திறப்பு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும்… அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்…!

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ கோவி.செழியன் கேள்வி எழுப்பினார். தி.மு.க. எம்.எல்.ஏ. மாரிமுத்து பேசுகையில், காவிரி டெல்டா பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ளது என்றார். அவரை தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் நீர் திறப்பு எப்போது என கூறினால்தான் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை செய்ய முடியும் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என தெரிவித்தார். முன்னதாக, பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபு, சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் பலி என செய்தி வந்துள்ளது. மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்