திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரத்தில் பூங்கா சாலையில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை ஜூலை 6-ம் தேதி சார்பதிவாளர் (பொறுப்பு) ஜஸ்டின் மணிகண்டன் தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிபி சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்டப் பதிவாளர் சசிகலா ஆகியோர் ஏற்கனவே ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த மோசடி வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பழனி சார் பதிவாளர் பாலச்சந்தர், சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவசங்கரி ஆகிய இரண்டு பேர் இன்று( ஆகஸ்ட் 3) சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை பத்திர பதிவுத்துறை பிறப்பித்துள்ளது.

Comments are closed.