சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆடிப்பெருக்கை ஒட்டி, வருகிற 3ம் தேதி அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களில், கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆடிப்பெருக்கு தினத்தன்று பத்திரப் பதிவுகளுக்கான தேவை அதிகரிக்கும் நிலையில், பொதுமக்களுக்கான ‘டோக்கன் ‘எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில், 100க்கு பதிலாக 150 பத்திரங்கள் பதிவு செய்யும் வகையில் டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். மேலும், அதிகளவில் ஆவண பதிவுகள் நடக்கும் 100 அலுவலகங்களில், 150 டோக்கன்களும் வழங்கப்படும். 12 தக்கால் பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்களும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Comments are closed.