Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் இடங்கள் அறிவிப்பு…!

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி,,லால்குடி, துறையூர் (தனி) ஆசிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் புலிவலம் ஓயாசிஸ் இன்ஸ்டி டியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகிய இடங்களில் நடைபெறும் என்று திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்