தமிழ்நாட்டில் 3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று( பிப்.27) திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகைதந்த ஓ. பன்னீர் செல்வத்தை பூங்கொத்து கொடுத்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரவேற்றார். ஓ.பன்னீர் செல்வத்துடன் அவரது மகனும், அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.