அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து கட்சிப் பணியாற்றி வருகின்றனர் . அந்தவகையில் நேற்றைய தினம் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் த.வெ.க. தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து, தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். இவர் 2006-2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-2016 வரை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. சார்பில் இவர்கள் அவரவர் போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Comments are closed.